Tag: sarathkumar

  • கமல் சொன்னதுக்கு ஆதாரம் இருக்கிறதா? திடீரென சீண்டிய சரத்குமார்..

    தற்போது கமல் நடிப்பில் தக் லைப் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு ,திரிஷா ,அசோக் செல்வன் என எண்ணற்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

    ராஜ்கமல் நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. படத்தில் உள்ள அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட பிரச்சனையில் இந்த படம் இருந்தது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது தான் எனக் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது.

    அதிலிருந்து கன்னட அமைப்பினர் கமலுக்கு எதிராக இந்த விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர். கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நீதிமன்றம் மூலமாக இந்த பிரச்சினையை கொண்டு போனார்கள். கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது . ஆனால் கமல் அவருடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    அதனால் கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் கமல் பேசியதில் ஆதாரம் இருக்கிறதா என சரத்குமார் கேட்டிருக்கிறார். இதை பற்றி சரத்குமார் மேலும் கூறும் பொழுது, திரையுலக நிகழ்ச்சியில் கமல் ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. தமிழ் மூத்த மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தமிழில் இருந்துதான் கன்னடம் வந்ததா என்பதற்கு கமலிடம் ஆதாரம் இருக்கிறதா என தெரியவில்லை.

    கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே பிரச்சினை உருவாக்கும் விதமாக கமல் பேச்சு அமைந்துவிட்டது. கமல் சொன்னது உண்மை என சீமானை தவிற வேறு யாரும் கூறவில்லை என சரத்குமார் கூறினார்.

  • ஹாலிவுட்டுக்கு செல்லும் சரத்குமார் மகள்!.. வரலட்சுமிக்கு அடித்த குபேர யோகம்!.. கல்யாண அதிர்ஷ்டமா?..

    நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நடிகை வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார், தாரை தப்பட்டை, மாரி 2, ராயன் போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, நெகடிவ் ரோல் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களிலும் வித்தியாசமாக நடித்து பாராட்டுப் பெற்றுள்ளார்.

    மேலும், சில வெப் தொடர்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு தொழிலதிபர் நிக்கோலாஸ் சச்தேவுடன் தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார். நிக்கோலாஸ் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் ஒரு மகளின் தந்தை என்றும் தகவல்கள் பரவின.

    வரலட்சுமி சந்திரன் ருட்னம் இயக்கத்தில் ஜெர்மி ஐயன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரிசானா எ கேஜ்டு பேர்ட்’ (RIZANA – A Caged Bird) என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிட்டில் அறிமுகமாகவுள்ளார். இது ஒரு சட்டம் மற்றும் நீதி தொடர்பான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் இருந்து நடிகைகள் பாலிவுட்டில் நடிக்கக் கிளம்பியுள்ள நிலையில் வரலட்சுமிக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவரது முக்கியமான தருணமாக இருக்கும் என்கின்றனர். இது குறித்து வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராமில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து, ஜெரமி இரான்ஸுடன் பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • மீண்டும் இணைந்த சூர்யவம்சம் ஜோடி!.. அதே போல இந்த படமும் சூப்பர் ஹிட்டாகும்.. சரத்குமார் உறுதி!..

    நடிகர் சரத்குமார் மற்றும் தேவையானி நடித்த சூர்யவம்சம் திரைப்படம் வெளியாகி நாளை ஜூன் 27ம் தேதியுடன் 28 ஆண்டுகாளை கடந்து இன்னமும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்துள்ள 3பிஎச்கே திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளீயிட்டு விழா இன்று நடைப்பெற்றது.

    அருண் விஸ்வாவின் ஷாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3பிஎச்கே திரைப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சித்தார்த், ஆர். சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    3பிஎச்கே படத்தின் கதை சென்னையில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கான அவர்களின் முயற்சிகளையும், ஏற்படும் சோதனைகளையும், தனிப்பட்ட பிரச்சனைகளையும் கதைத்தளமாக கொண்டுள்ளது. இது ஒரு ராஜா கதை இல்ல இது நம்ம குடும்பத்தை பற்றிய கதை என்று டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்று நடைப்பெற்ற ட்ரெயிலர் வெளியிட்டு விழாவில் பேசிய சரத்குமார், தான் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக என பல படங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது என்றால் அந்த கதை அவர்களுடன் ஒன்றிணைந்துள்ளது. அதனால், அந்த படங்கள் எல்லாம் இன்னமும் பேசப்படுகிறது. வீடு கட்டனும் என்பது எல்லாருக்கும் இருக்குற ஒரு மிகப்பெறிய கனவு. அது அனைவராலும் அடையமுடியுமா என்று தெரியவில்லை. அனைவருக்கும் வீடு என்பது அவசியம் தேவை அதை அடைய அவர்கள் எதிர்க்கொள்ளும் சோதனை அதிகம் என்றார்.

    மனிதன் ஒரு முயற்சியில் விழுந்தால் எழவேண்டும். தயாரிப்பாளர் அருண் ஷேவ் பண்ணி வந்திருப்பதை பார்த்தால் அவர் அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அப்படத்தை தேவையானி இயக்குவார் என்றும் கலாய்த்து பேசினார் சரத்குமார்.

    நடிகர் சூரி அந்த படம் குறித்து பேசிய போது, ஒரு வீடு, ஒரு கனவு, தனக்கு ஒரு வீடு, சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இனிய இடம். தயாரிப்பாளர் அருணிற்கும் 3பிஎச்கே குழுவிற்கும் கனவு நிஜமாகி உயர்ந்த வெற்றியை தொட தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார். ஏகப்பட்ட பிரபலங்களும் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள 3பிஎச்கே படத்தை பாராட்டி பேசியுள்ளனர். அடுத்த மாதம் தொடக்கத்தில் அந்த படம் வெளியாகிறது.

  • இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி கேட்குதோ…சரத்குமாரை பங்கமாய் கலாய்த்த சீமான்

    விமல் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பரமசிவன் பாத்திமா. விமலின் 34வது படமான

    இதனை இசக்கி கர்வண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். புதுமுகம் சாயாதேவி நாயகியாக நடிக்கிறார்.

    வெவ்வேறு மதத்தை சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி காதலிக்கின்றனர். இதனால் ஏற்படும் விபரீதங்களே இப்படத்தின் மூலக்கதை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம்ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நாதக நிறுவனர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, பொன்னியின் செல்வன் படம் வெளியானபோது சரத்குமாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரிடம் இந்த வயதில் உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி கேட்குதோ என நக்கலாக கூறினேன். அதனை கேட்டு சிரித்த சரத்குமார், உனக்கு பொறமைடா. உடலை நன்றாகவைத்துக் கொண்டால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று கூறினார் என சீமான் பேசினார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

  • விமான சாகச நிகழ்வுல யாரைக் கைது செஞ்சோம்..? சரத்குமார் காட்டம்

    அல்லு அர்ஜூன் கைதானதும், மோகன்பாபு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சை ஆனதும் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள். இரண்டுமே பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் இருவருக்கும் ஆதரவாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

    ஒரு விழாவுக்குக் கூட்டம் வருதுன்னா அது முதல்ல போலீஸ்சுக்குத் தெரிஞ்சிருக்கும். அன்பு சகோதரி தமிழிசை சொல்லிருக்காங்க. அதே தான் என்னோட நோக்கம். இவ்ளோ கூட்டம் வருதுன்னா தியேட்டர் ஓனர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வர்றாருன்னு சொல்லிருப்பாங்க.

    வரும்போது போலீஸ் பந்தோபஸ்து கேட்டுருப்பாங்க. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்னு தெரிஞ்சா ஐயோ எங்களால பந்தோபஸ்து வழங்க முடியாது. நீங்க வராம இருக்குறது நல்லதுன்னு சொல்லிருக்க வேண்டும். வந்தபிறகு சொல்லும்போது அவர்தான் அதுக்குக் குற்றவாளின்னு கைது செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கின்றேன்.

    அங்கே விமானப்படையின் வீரதீர சாகசங்கள் நடக்கும்போது 5 பேர் செத்தாங்க. யாரைக் கைது பண்ணுனீங்க. ஏர் மார்ஷலையா? அதுக்கு நாம் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் உரிய நேரத்தில் சொல்லவில்லையோ. நான் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. அது தேவையா என்பது எனக்கு புரியவில்லை.

    அதே போல மோகன்பாபு பத்திரிகை சகோதரர்களை அடித்தார் என்று சொல்கிறார்கள். எனக்கு அவரை பல ஆண்டுகளாகத் தெரியும். என்னன்னா அவருக்கும் அவரு மகனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. அதுல அவங்க மகனுக்கு வீட்டுக்குள்ள போகறதுக்கு உரிமை இருக்கு.

    ஆனா கதவைத் தள்ளிக்கொண்டு அவர் போகும்போது பத்திரிகை சகோதரர்களும் உள்ளே போயிட்டீங்க. ஓகே. ஆனா மோகன்பாபுவுக்கு யாராவது வந்தால் எப்படி தெரியும்?

    அதனால தன்னைப் பாதுகாப்பதற்கு அப்படி பண்ணிருக்கலாம். உள்ளே போனதே தப்பு தானே. வெளியே வந்து அப்படி பண்ணிருந்தா குற்றம் சொல்லிருக்கலாம். அதனால அங்கிருக்குற கமிஷனர் அவர்கள் பார்த்து நிதானமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தற்போது மோகன்பாபு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • என் வயசு 26.. இந்த சின்ன பொண்ணு என் கூட ஜோடி!.. பிரஸ் மீட்டில் வம்பிழுத்த நாட்டாமை!..

    நடிகர் சரத்குமார்: தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவர் தி ஸ்மைல் மேன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இது இவரின் 150வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

    இதனால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்து வருகின்றார்.

    இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றளவும் பிரபலமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரத்குமார் தி ஸ்மைல் மேன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். சனிக்கிழமையான நேற்று தி ஸ்மைல் மேன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரமான ஆழியாவும் அந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் சரத்குமாரை அங்கிள் என்று அழைத்தார். அதன் பிறகு ஒவ்வொருவராய் பேச நடிகர் சரத்குமாரும் கலகலப்பாக பேசியிருந்தார்.

    அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘நான் எப்போதும் இளமை தான். எனக்கு வயசு ஆகாது. சொல்லப்போனால் ஆழியா வளர்ந்து என் படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. யார் சொன்னது எனக்கு அவ்வளவு வயதாகி விட்டது என்று இப்போது எனக்கு வயது 26 தான் வேண்டுமென்றால் 30 வயது என்று வைத்துக் கொள்ளலாம்.

    மேலும் ஆழியா தன்னை அங்கிள் என அழைத்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றேன். அதைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் நடிகர்களை கூத்தாடிகள் என்று சொல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் அரசியலில் நடிகர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் என்று பதில் அளித்திருந்தார்.

    பின்னர் சூரியவம்சம் 2 அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத்குமார் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி விரைவில் இது தொடர்பான தகவலை அறிவிப்பார் என்று கூறியிருந்தார். பிரஸ் மீட்டில் நடிகர் சரத்குமார் கலகலப்பாக பேசியிருந்தது அங்கு இருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

  • ஆர்ப்பாட்டமில்லாத சரத்குமார்150… மல்லுவுட் ஸ்டைலில் தமிழில் ”தி ஸ்மைல்மேன்”.. மிரட்டும் டிரைலர்

    The Smile man: ஆர்.சரத்குமார் நடிப்பில் 150 திரைப்படமான தி ஸ்மைல் மேன் திரைப்படத்தினை டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

    8 தோட்டாக்கள், ஜீவி திரைப்படத்தில் ஹீரோவாக வெற்றி நடித்த “மெமரீஸ்” திரைப்படத்தினை சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாக்கிய ஷ்யாம், பிரவீன் என்ற மலையாள இயக்குனர்கள் டைரக்ஷனில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் தி ஸ்மைல் மேன்.

    இப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சிதம்பரம் நெடுமாறன் என்னும் காவல் அதிகாரி வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க இருக்கிறார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு அடுத்த ஒரு வருடத்திற்குள் மொத்த ஞாபகங்களை மறக்கும் இக்கட்டான நிலையில் சீரியல் கில்லர் ஒருவரை கண்டுபிடிக்கும் கதையை மையமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக மலையாளத் திரைப்படம் தான் க்ரைம் திரில்லர் படங்களில் வித்தியாசமான கதைகளை கொடுத்து சூப்பர் ஹிட் கொடுக்கும். அந்த வகையில் பல ஆண்டுகள் கழித்து தமிழில் ஒரு வித்தியாசமான படமாக தி ஸ்மைல் மேன் அமைய இருக்கிறது.

    இப்படத்தில் சீரியல் கில்லர் ஒருவர் கொலை செய்துவிட்டு அதை பொது இடங்களில் போட்டு விட்டு செல்கிறார். கடைசியில் சிதம்பரம் நெடுமாறன் ஆன சரக்குமாரையே அவர் கொல்ல துணிவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இப்படத்தின் பின்னணி செய்யும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் அப்பிளாஸ் வாங்கிக் கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் சரத்குமார் நடிப்பில் திரைப்படம் 150 ஆவது படம் என்பதால் தற்போது படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

  • சரத்குமார் மிஸ் பண்ணின சூப்பர்ஹிட் படங்கள்… அட இவ்ளோ இருக்கா…?

    தமிழ்சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இவரை சுப்ரீம் ஸ்டார்னும் சொல்வாங்க. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு பிற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். 150 படங்கள் வரை நடித்துள்ளார்.

    அவரது 150வது படம்தான் தற்போது வெளிவந்து ஓடிக் கொண்டு இருக்கும் தி ஸ்மைல் மேன். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், தென்காசிப் பட்டணம் உள்பட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க முடியாமல் மிஸ் பண்ணின படங்களைப் பார்ப்போம்.

    ஜென்டில்மேன்

    ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த படம் ஜென்டில்மேன். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் படத்தை முதலில் சரத்குமாரிடம் தான் ஷங்கர் சொன்னார். அதே நேரம் அவர் பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

    ரோஜாவை கிள்ளாதே

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1993ல் அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் ரோஜாவை கிள்ளாதே. குஷ்பூ ஜோடியாக நடித்துள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். இந்தப் படமும் சரத்குமாருக்குத் தான் போனது. ஆனால் கால்ஷீட் பிராப்ளம் இருந்ததால அவரால பண்ண முடியாமல் போனது.

    தாயகம்

    ஏ.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் 1996ல் வெளியான விஜயகாந்த் படம் தாயகம். இது ஒரு சூப்பர்ஹிட் படம். விஜயகாந்துடன் அருண்பாண்டியன், நெப்போலியன், ரஞ்சிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குனர் அருண்பாண்டியன் கேரக்டருக்கு இயக்குனர் சரத்குமாரிடம்தான் கதை சொன்னாராம். ஆனா இந்த ரோல் பிடிக்காம சரத்குமார் நோ சொல்லி மறுத்து விட்டாராம்.

    கண்ணுபட போகுதய்யா

    பாரதிகணேஷ் இயக்கத்தில் 1993ல் வெளியான படம் கண்ணுபட போகுதய்யா. விஜயகாந்த், சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுல விஜயகாந்துக்கு இரட்டை வேடம். எஸ்;.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் இயக்குனர், சரத்குமாரிடம் தான் கதையை சொன்னாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இது ஒரு சூப்பர்ஹிட் படம்.

    வானத்தைப்போல

    விக்ரமன் இயக்கத்தில் 2000ல் வெளியான சூப்பர்ஹிட் படம் வானத்தைப் போல. விஜயகாந்த், பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் சரத்குமாரை மனதில் வைத்துத்தான் விக்ரமன் கதை எழுதினாராம். ஆனா அவர் கதையை விஜயகாந்திடம் சொல்ல ஓகே ஆனதாம்.

  • இயக்குனர் சொன்ன காமெடி… வேண்டா வெறுப்புடன் நடித்த வடிவேலு கிரேட் எஸ்கேப்!

    அரசு, கம்பீரம், நம்நாடு, சபரி என பிரபல படங்களை இயக்கியவர் சுரேஷ். மகாராஜன், தரணி, லிங்குசாமி போன்ற பெரிய பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றியவர். இவர் வைகைப்புயல் வடிவேலு இந்தப் படத்தில் நடித்தது குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    விவேக்: அரசு பக்காவான கமர்ஷியல் படம். நல்ல காமெடி. அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டருன்னு சொல்ற காமெடி இதுலதான் வரும். படத்துல வடிவேலு. நான் ஒர்க் பண்ணினது எல்லாம் விவேக், கவுண்டமணி, செந்தில் உடன் ஒர்க் பண்ணிருக்கேன். முதல்ல விவேக்குக்கு எழுதுனேன். அவரு முழு படத்துக்கும் கொண்டு வரச் சொன்னாரு. அதுக்கு சான்ஸ் இல்ல. செகண்ட் ஆஃப் சீரியஸா போகும்னு சொன்னேன். அதனால அவர் மறுத்துட்டாரு.

    வடிவேலு: அப்புறம் வடிவேலுவைக் கொண்டு வந்தோம். ‘அவர் கருப்பா இருப்பாரு. அக்ரஹாரத்துக்கு செட்டாவாரா..’ன்னு தெரியலன்னு சொன்னாங்க. அப்புறம் அந்தமாதிரி ஆள்கள் இருக்காங்க. நல்லாருக்கும்னு வடிவேலுவுக்கு ரெகமண்ட் பண்ணினேன். அவருக்கு வந்த அன்னைக்கு டயலாக் சொல்லிக் கொடுக்குறேன். அவருக்குப் பிடிக்கல.

    ‘இது நல்லா இல்ல. என் ஆள்களை வச்சே எழுதிருப்பேன். எனக்கு டைம் கொடுங்க’ன்னாரு. நான் கதையோடு வர்ற மாதிரி காமெடி எழுதினேன். உடனே நடிக்கும்போது இது நல்லா இல்லன்னு சொன்ன வடிவேலு பக்கத்தில இருந்தவர்கிட்ட கேட்குறாரு. என்னப்பா உனக்கு சிரிப்பு வந்ததான்னு.

    அவங்களும் வடிவேலுவுக்குப் பயந்துக்கிட்டு வரலன்னு சொன்னாங்க. உடனே சரத் சார்கிட்ட போய் சொன்னேன். அப்பவும் ‘இவரு படிக்கிறாரு. எனக்கு சிரிப்பு வரலயே. எனக்கு வரலன்னா பரவாயில்ல. பக்கத்துல உள்ளவங்களாவது சிரிக்கணுமே. அவங்களுக்கும் வரலயே.

    சரத்குமார் ரெகமண்ட்: எனக்கு 10 நாள் டைம் கொடுங்க. நான் என் ஆளுங்களோடு சேர்ந்து எழுதிட்டு வர்றேன்’னாரு வடிவேலு. அப்புறம் சௌத்ரி சார் டென்ஷன் ஆகிடுவாரு. எனக்கு இது பர்ஸ்ட் படம்னு சொன்னதும் சரத் சார் திரும்பவும் வடிவேலுவிடம் ‘நீங்க நடிங்க. நல்லா இல்லன்னா சௌத்ரி சார்கிட்ட சொல்லி ரீஷூட் பண்ணிடுவோம்’னாரு. அப்புறம் வடிவேலு வேண்டா வெறுப்போடு நடிச்சாரு.

    எண்ட் ஷாட் எடுக்குறேன். அவரு பைக்ல ஏறி எஸ்கேப்னு சொல்வாரு. அப்படி சொல்லிட்டு பைக்ல இருந்து இறங்கி கார்ல ஏறி அப்படியே ஊருக்குப் போயிட்டாரு. விட்டாப் போதும்கற மாதிரி போயிட்டாரு. எனக்குப் பதறுது. மானிட்டர் பார்க்குறதுக்கு முன்னாடி போயிட்டாரு. நான் ஷாக் ஆகிட்டேன்.

    போகும்போது காலைத்தூக்கி டென்ஷன்ல போனாரு. அது ஸ்பாட்லயே பண்ணினாரு. அவருக்கிட்ட என்ன பிளஸ்னா கோபத்தைக் கூட எங்கிட்டதான் காட்டுனாரு. நடிக்கும்போது காட்டல. நல்லா நடிச்சிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. அப்புறம் டப்பிங்ல 2 மணி நேரத்துல வர்றேன்னு சொல்லிட்டுப் போனாரு. எனக்கு ஷாக் ஆகிட்டு. திரும்ப வந்தாரு. முதல் ரீல் பார்த்தாரு.

    வேற ஸ்டைல் காமெடி: பின்னாடி என்ஜினீயர்ஸ் எல்லாரும் இருந்தாங்க. அவங்களாம் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. பின்னாடி திரும்பிப் பார்த்தாரு. ‘இது நல்ல வேற ஸ்டைல்ல இருக்குல்ல…’ அப்படின்னு இன்ட்ரஸ்ட் எடுத்து 7 மணி நேரம் டப்பிங் பேசினாரு. அடுத்து கம்பீரம் படம் பண்ணும்போது என் பேரைச் சொன்னதும் டேட் கொடுத்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • அது வேற வாய்? இது? விஜய் மீது காண்டில் இருப்பாரு போலயே சரத்… ரசிகர்கள் கலாய்

    Vijay: தமிழில் கொடிகட்டி பறந்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்திருக்கும் நிலையில் அவர் மீது நடிகர்கள் பலரே கடுப்பில் இருப்பதால் மேடையில் அவதூறாக பேசிய வருவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தளபதி விஜய் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையில் இருந்து வெளியாகி அரசியலில் இறங்க இருக்கிறார். தனக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி இருக்கும் அவர் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்றும் பெயர் வைத்து இருக்கிறார்.

    கடந்தாண்டு உருவான இக்கட்சி சமீபத்தில் இரண்டாம் ஆண்டு விழாவை வெகு விமர்சையாக நடத்தியது. அதில் தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் எதிரியையும், கொள்கை எதிரியையும் குறித்து பேசியிருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது.

    தற்போது பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த பேச்சு குறித்து தங்களுடைய அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நடிப்பிலிருந்து அரசியலுக்கு சென்ற நடிகர்கள் கூட விஜய் குறித்து தற்போது அதிகமாக விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.

    இந்நிலையில் அரசியல் தலைவராக இருக்கும் சரத்குமார் சமீபத்தில் ஒரு மேடையில் விஜய் தன்னுடைய பிள்ளைகள் சம்பவம் செய்ததாக குறிப்பிட்டார். என்ன சம்பவம் செஞ்சுட்டாங்க. இவருக்கு எதையும் தெரிந்து கொண்டு பேச முடியவில்லை.

    அவருடைய மேடையில் தமிழ் தெரியாத பிரஷாந்த் கிஷோர் இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற வைக்க இப்படி ஒருவர் அவருக்கு தேவைப்படுகிறது. திமுகவை வெற்றி பெற செய்தது போல் விஜய்யை வெற்றி பெற செய்து விடுவாரா வரும் தேர்தலில் கண்டிப்பாக பார்ப்போம் என காட்டமாகவே பேசியிருக்கிறார்.

    வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயை சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்ட சரத்குமார் இப்படி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. விஜய் மீது இருக்கும் கடுப்பில் தான் இவர் இப்படி பேசுவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    அப்போது சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்ட போது விஜய்க்கு எதுவும் தெரியாது என்பது இவருக்கு தெரியாதா? அரசியலுக்குள் நுழைந்த உடன் விஜயை குறித்து இவர் இப்படி பேசுவது சரியா என ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.