Author: சிவா

  • Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிரபார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் அப்போது வெளியாகவில்லை. ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படம் மறுதணிக்கை செய்யப்படவேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் ஷாக்கான தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி சென்று ஒரு மாதம் ஓடிப்போனதே தவிர படத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வழக்கை வாபஸ் பெற்றதோடு, மறுதணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

    படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த படத்தை பார்க்கவேண்டும் என தணிக்கை வாரியம் தரப்பில் சொன்னதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. போலீசாரின் விசாரணையில் வீடியோ எடிட்டர் படத்தை திருடியது தெரியவந்தது. அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில்தான், தேர்தல் முடிந்து அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 24ம் தேதி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்க தணிக்கை வாரியம் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 30ம் தேதி ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

  • மே 4ம் தேதி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க ஸ்டாலின் சார்!.. தெறிக்கவிட்ட விஜய்!…

    மே 4ம் தேதி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க ஸ்டாலின் சார்!.. தெறிக்கவிட்ட விஜய்!…

    திமுகவை திட்டுவதற்காகவே, திமுகவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்காகவே அரசியலுக்கு வந்தது போல் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் எப்போது தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கினாரோ அப்போது முதலே திமுகவை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார் விஜய்.
    அதிலும் கரூர் சம்பவத்திற்கு பின் திமுகவின் மீதான விமர்சனம் மிகவும் கடுமையாக மாறிவிட்டது. ஏனெனில், கரூர் சம்பவதிற்கு பின் அரசியல் சதி இருக்கிறது என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார்.

    இந்நிலையில், இன்று சென்னை நந்தனம் பகுதியில் பிரச்சாரம் செய்த விஜய் ‘நாங்கள் இதிலெல்லாம் அரசியல் செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு கரூர் சம்பவத்திற்கு நான் தாமதமாக வந்ததே காரணம் என சட்டசபையில் சொன்னார் ஸ்டாலின் சார். நான் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு எப்படி சென்றேன் என்று உங்களுக்கு தெரியுமா? செல்லும் வழியில் காத்திருந்த மக்களை தவிர்த்துவிட்டு நான் செல்ல முடியுமா? உங்கள் மீது தவறே இல்லை என்றால் ஏன் செந்தில் பாலாஜியை கரூரில் நிற்க வைக்காமல் கோவைக்கு அனுப்பினீர்கள்?’ என்று விஜய் கேள்வி எழுப்பினார்..

    மேலும், தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ம் தேதி மிகவும் சிறப்பான நாள் என ஸ்டாலின் சொல்லியிருக்கார். ஆமாம், அன்று ஸ்பெஷலான நாள்தான்.. அன்றுதான் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாள்.. கத்திரி வெயில் மண்டையை பொளக்கும்.. அந்த வெயில் மக்களுக்காகவே ஆகாது.. எப்படா இந்த சூரியன் மறையும்? எப்படா இந்த சூரியன் ஒழியும்? என்று எல்லோரும் சூரியனை வெறுத்து ஒதுக்கும் நாள்.. அதுதான் இந்த தேர்தல் முடிவுகள் அறிகுறி’ என விஜய் பேசியிருக்கிறார்..

  • அரசியலுக்கு வந்தா பிரெஸ்ஸ சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?.. முட்டு கொடுக்கும் எஸ்.ஏ.சி..

    அரசியலுக்கு வந்தா பிரெஸ்ஸ சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?.. முட்டு கொடுக்கும் எஸ்.ஏ.சி..

    பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்.. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். எதிர்க்கட்சிகளுக்கு தாங்கள் செல்ல வேண்டியதை செய்தியாளர்கள் மூலம் சொல்வார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனம் தெரிவிப்பார்கள்.. அறிக்கைகளை வெளியிடுவார்கள். வெளியே எங்கு சென்றாலும் செய்தியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கேள்விகள் கேட்டால் பதில் சொல்வார்கள்.

    அதற்கு சிறந்த உதாரணமாக நாம் தமிழர் கட்சி சீமானை சொல்ல முடியும். அவர் எப்போதும் செய்தியாளர்களை கண்டு ஓடியதில்லை. அவருக்கு பின் எடப்பாடி பழனிச்சாமியை சொல்லலாம். முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை மிகவும் குறைவாகவே செய்தியாளர்களை சந்திக்கிறார்.. அதிகபட்சம் சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்..

    ஒருபக்கம் நடிகராக இருந்து கட்சி துவங்கிய நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை. எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் அவர் பேடி கொடுத்ததில்லை. தமிழக அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான அரசியலை விஜய் செய்து வருகிறார். விஜய் செய்தியாளர் சந்திப்பதில்லை என்கிற விமர்சனத்தை பலரும் அவர் மீது வைக்கிறார்கள்.

    ஆனால் அவர் எந்த பதிலும் சொல்வதில்லை.. செய்தியாளர்கள் கூப்பிட்டால் கூட காது கேட்காத மாதிரி சென்று விடுகிறார். இந்நிலையில், நேற்று ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘ஒரு அரசியல்வாதி தினமும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற ரூல்ஸ் ஏதாவது இருக்கிறதா?.. நான் தேர்தலில் நிற்கிறேன்.. எனக்கு ஓட்டு போங்கள்’ என்று கூட அவர் விளம்பரம் செய்வதில்லை.. அதை மட்டும் ஏன் நீங்கள் கேட்கவில்லை?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..

  • ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்!.. கொண்டாடிய படக்குழு!.. வைரல் போட்டோஸ்!..

    ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்!.. கொண்டாடிய படக்குழு!.. வைரல் போட்டோஸ்!..

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து ஏற்கனவே வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பற்றி 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினியின் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக ஜெயிலர் இருக்கிறது.

    இந்த படத்தில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவ்ராஜ்குமார் என பலரையும் கொண்டுவந்து கேமியோ வேடத்தில் நடிக்க வைத்திருந்தனர். அவர்கள் சில நிமிடங்கள் நடித்திருந்தாலும் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜெயிலர் படம் நல்ல வசூலை பெற்றது..

    இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியது/ கடந்த பல மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த படத்தில் யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்தனர். இந்த படத்திலும் மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் கேமியோ செய்திருக்கிறார்கள். மேலும் கேமியோ வேடத்தில் ஷாருக்கானை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்கவில்லை என்பதால் பவன் கல்யாணை வைத்து அந்த காட்சிகளை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

    பல மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது., இதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

  • தனுஷுன் அடுத்த 4 படங்கள்!. இயக்குனர்கள் யார்?!. செம அப்டேட்!..

    தனுஷுன் அடுத்த 4 படங்கள்!. இயக்குனர்கள் யார்?!. செம அப்டேட்!..

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க தொடங்கி தொடர்ச்சியாக காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. கமர்சியல் மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் தனுஷ்..

    அதில் ஒரு படம்தான் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவன் நடித்திருக்கும் கர. இந்த திரைப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே இது தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    கர திரைப்படம் தனுஷின் 54 வது திரைப்படமாகும். இந்நிலையில், தனுஷின் அடுத்த மூன்று படங்கள் என்ன, அந்த படங்களின் இயக்குனர் யார் என்கிற விவரத்தை பார்ப்போம்.. தனுஷின் 55வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்..

    தனுஷின் 56வது திரைப்படத்தை லப்பர் பந்து படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளார். அதேபோல் தனுஷின் 57வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இது ஒரு சரித்திர கதையாகும். தனுஷ் இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இப்படம் உருவாகவுள்ளது. அடுத்த தனுஷின் 58 வது படமாக வெற்றிமாறன் வடசென்னை 2 இருக்கலாம் என கணிக்கப்படுகிறது..

  • நேர்ல வர முடியாது!. ஒன்லி வீடியோ கால்.. விவாகரத்து வழக்கில் விஜய் எடுத்த முடிவு!..

    நேர்ல வர முடியாது!. ஒன்லி வீடியோ கால்.. விவாகரத்து வழக்கில் விஜய் எடுத்த முடிவு!..

    நடிகர் விஜயின் மனைவி சங்கீதா இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அந்த விவாகரத்து மனுவில் தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தான் வீட்டில் இருக்கும் போதே நடிகையை அழைத்துவந்து விஜய் குடும்பம் நடத்தியதாகவும், அதை தட்டி கேட்டால் தன்னை பொருளாதார ரீதியாக முடக்கியதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்படவில்லை எனவும் பல புகார்களை கூறியிருந்தார்..

    மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் வெளியிடுவதோடு, நடிகையின் மீது வழக்கும் தொடர்வேன் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த செய்தி வெளியாகி சில நாட்களிலேயே விஜய் நடிகை திரிஷாவை கூட்டிக்கொண்டு ஜோடி சகிதமாக ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சங்கீதா தொடர்ந்த விவாகரத்து தொடர்பான வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படவில்லை. சங்கீதா மட்டுமே விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்..

    அதோடு இரு தரப்பினரும் தாங்கள் நேரில் வர முடியாது என கூறிவிட்டதால் வருகிற ஜூன் 15ம் தேதி காணொளி மூலம் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே தனது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கை விஜய் வீடியோ கால் மூலம் மட்டுமே அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • பெல்ஜியம் போட்டியில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் டீம்!.. குவியும் பாராட்டு!…

    பெல்ஜியம் போட்டியில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் டீம்!.. குவியும் பாராட்டு!…

    நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது போன்ற பல விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.

    அதேபோல் தனியாக பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் பழக்கமும் உடையவர். கடந்த சில வருடங்களாகவே அஜித் உலகமெங்கும் நடக்கும் பல கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.. இதற்காக அவர் ஒரு தனி டீமையே உருவாக்கியிருக்கிறார். துபாயில் நடந்த முதல் போட்டியிலேயே அஜித்தின் டீம் மூன்றாவது வரிசை வென்றது.. அப்போதே பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

    இந்நிலையில் பெல்ஜியத்தில் தற்போது நடைபெற்று வந்த 24H Series தொடரில் GR3 PRO பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து இந்திராவுக்கு பெருமை சேர்த்திருக்கிறது அஜித்தின் ரேசிங் அணி. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலை தினங்களில் வைரலாகி வரும் நிலையில் அஜித்துக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

  • விஜயை திட்டிய அப்பா சத்யராஜுக்கு மகன் சிபிராஜ் பதிலடி!.. தளபதி ஸ்டைல்!…

    விஜயை திட்டிய அப்பா சத்யராஜுக்கு மகன் சிபிராஜ் பதிலடி!.. தளபதி ஸ்டைல்!…

    நடிகர் விஜய் அரசியல்வாதியான பின் திரை துறையிலிருக்கும் ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்கள் உள்ளிட்ட யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனெனில் பொதுவாகவே திரையுலகம் ஆளுங்கட்சியை எப்போதும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். இது காலம் காலமாக நடப்பதுதான். அதோட ஆளுங்கட்சியோடு இணக்கமாகவும் காட்டிக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு பல ஆதாயங்களும் கிடைக்கும்.

    அதனால்தான் அரசியலுக்கு வருவது என முடிவெடுத்ததும் சினிமாவிலிருந்து விலகினார் விஜய். ஒருபக்கம் கடந்து சில நாட்களாகவே பிரகாஷ்ராஜ், சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதில் சத்யராஜின் மகள் திவ்யா ஏற்கனவே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒருபக்கம் அவர் விஜயை விமர்சித்து வரும் நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவ்வர் விஜயை விமர்சித்து பேசியிருந்தார்.

    விஜய் கட்சி ஆரம்பித்தபோது பெரியாரியும், அம்பேத்காரையும் கொள்கை தலைவர்கள் என சொன்னதும் அவர்களின் கொள்கைகளை விஜய் தம்பி மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறார் என சந்தோஷப்பட்டேன். ஆனால் தமிழக முதல்வரை ஸ்டாலின் அங்கிள் என்கிறார், ஸ்டாலின் சார் என்கிறார்..

    இப்படி மரியாதை இல்லாமல் அவர் பெரியவர்களை பேசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் மதிக்கும் விஜய் எப்படி இப்படி மாறினார் என தெரியவில்லை.. திமுகவை தவிர்த்து மற்ற யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பாஜகவுக்கு போகும் ஓட்டுதான். எனவே விஜயை ஆதரிக்காதீர்கள்’ என சத்யராஜ் பேசியிருந்தார்..

    ஒருபக்கம் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜயின் தீவிர ரசிகர்.. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருபவர். இந்நிலையில், சத்யராஜ் பிரச்சாரத்தில் விஜயை விமர்சித்து பேசியிருந்த நிலையில் தான் டிவிட்டர் பக்கத்தில் விஜயின் புகைப்படத்தை பகிர்ந்து விஜய் முன்பு சொன்ன ‘உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்தறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என்கிற பன்ச் டயலாக்கை பதிவிட்டிருக்கிறார்.
    இது அப்பா சத்யராஜுக்கு அவரின் மகன் சிபிராஜ் கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.

  • சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

    சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

    நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக விஜய் நடிகை ஒருவருடன் கடந்த சில வருடங்களாகவே தொடர்பில் இருப்பதே விவாகரத்துக்கு காரணம் என சங்கீதா சொன்னது பேசுபொருளானது.

    மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் எனவும், அவர் மீது வழக்கு தொடர்வேன் எனவும் சங்கீதா கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் விஜய் நடிகை திரிஷாவை அழைத்துக்கொண்டு ஒரு திருமண விழாவுக்கு சென்றதும் சர்ச்சையை கிளப்பியது. சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை திரிஷாதான் என பலரும் சமூகவலைத்தளங்களில் பலரும் பேசத் தொடங்கினார்கள்..

    vijay sangeetha

    இந்நிலையில், சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு ஏப்ரல் 20ம் தேதியான நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சங்கீதாவுக்கு விவாகரத்து அளிக்க விஜய் முன் வந்திருப்பதாக தெரிகிறது. மேலும் பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.. மும்பையில் இருந்து வந்த இரு தரப்புக்கும் நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது..

    அப்போது வேட்பு மனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்துக்கு 250 கோடி செட்டில்மெண்ட் தர வேண்டும் எனவும், மகன், மகளுக்கு தனியாக செட்டில்மெண்ட் கொடுக்க வேண்டும் எனவும் சங்கீதா தரப்பில் கேட்டதாக தெரிகிறது. ஆனால் மனைவிக்கு மட்டும் ரூ. 35 கோடி செட்டில்மெண்ட் அளிப்பதாகவும், மகன், மகள் இருவரின் எதிர்காலத்தையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் விஜய் தரப்பு சொன்னதாக தெரிகிறது.. அதற்கு சங்கீத தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

    தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால் நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பு ஒரு தொகையை சொல்லும்.. அதன்பின் அதை கொடுக்க முடியுமா? முடியாதா? என்பதை விஜய் சொல்வார்.. விசாரணைக்கு பின் நீதிபதி ஒரு தீர்ப்பளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது..

  • கர ஆடியோ லான்ச் & டிரெய்லர் அப்டேட்!.. தனுஷ் ஃபேன்ஸ் பி ரெடி!…

    கர ஆடியோ லான்ச் & டிரெய்லர் அப்டேட்!.. தனுஷ் ஃபேன்ஸ் பி ரெடி!…

    வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. போர்த்தொழில் திரைப்படம் திரைப்படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் மமீதா பைஜூ நடித்திருக்கிறார். மேலும் ஜெயராம் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் புகைப்படங்களும், டைட்டில் டீசர் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு, டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னை நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.