Author: adminram

  • ஜனநாயகன் படத்தை திருடி லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் கைது.. யாரு பார்த்த வேலைன்னு பாருங்க!..

    ஜனநாயகன் படத்தை திருடி லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் கைது.. யாரு பார்த்த வேலைன்னு பாருங்க!..

    தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இந்த ஆண்டு பொங்கலுக்கே ரிலீஸாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சினைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது தற்போது அப்படம் ஆன்லைனில் லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முக்கிய குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில் அரசியல் மற்றும் அக்‌ஷன் படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளது.

    கே.வி.என் தயாரிப்பில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான ஜனநாயகன் தற்போது ஆன்லைனில் லீக்கானதால் தயாரிப்பாளர்களுக்கு ₹300–400 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த லீக் குறித்து போலிஸ் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டிஜிட்டல் தடயங்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் வேறு ஒரு படத்தின் வீடியோ எடிட்டர் ஒருவர், ஃப்ரீலான்சர் எடிட்டர் உள்ளிட்ட மூவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் எடிட்டிங் டிபார்ட்மெண்டில் வேலை பார்ப்பவர்கள் கண்டிப்பாக திருடி லீக் செய்திருக்கமாட்டர்கள் என எடிட்டர் சங்கம் சமீபத்தில் எடிட்டர்களுக்கு ஆதரவாக பேசிய நிலையில், யாருடைய தூண்டுதலின் பேரில் எடிட்டர்கள் இந்த வேலையை பார்த்துள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    ஏற்கனவே இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியே கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    விஜய் ரேஞ்சுக்கு உயருவாருன்னு பார்த்தா.. கென் ரேஞ்சுக்கு பிரதீப் ரங்கநாதனை இறக்கிய விக்னேஷ் சிவன்!

    சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தொடர்ந்து 100 கோடி வசூலை கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதனை, அடுத்து விஜய் ரேஞ்சுக்கு உயர்த்துவார் விக்னேஷ் சிவன் என்று பார்த்தால் கென் கருணாஸ் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டாரே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    கடந்த வாரம் வெளியான எல்.ஐ.கே. திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறாத நிலையில், அதனை முன்கூட்டியே உணர்ந்தது போலவே விழாவில் விக்னேஷ் சிவன் உரையாற்றினார். “இந்த படத்தை நான் முழுமையாக என் சொந்த செலவில் தான் தயாரித்தேன். சமூக வலைத்தளங்களில் படத்தைப் பற்றி பலவிதமான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இனி இப்படிப் பெரிய செலவுகளை செய்ய என்னிடம் வசதி இல்லை,” என்று அவர் கூறினார்.

    மேலும், தற்போது நிலவி வரும் ‘தம்ப்நெயில் கலாச்சாரம்’ குறித்து அவர் கவலை தெரிவித்தார். “நல்ல விஷயங்களையும் தவறாகச் சொல்லி தான் ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பலரும் ஏதாவது பேசுகிறார்கள். அதை பார்த்து மக்கள் நம்பி விடுகிறார்கள்,” என்றும் கூறினார்.

    அதோடு, “இன்னும் சிலருக்கு நான் பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால், இந்த படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.

    திரைப்பட விமர்சனங்களைப் பற்றியும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். “நான் படம் எடுத்தால், ‘நீ செய்த கேசரி ஏன் காரமாக இருக்கிறது? நீ வைத்த கறி குழம்பு ஏன் இனிப்பாக இல்லை?’ என்று கேட்பது போல கதையையும் குறை கூறுகிறார்கள். என்னால் ஒரு அளவிற்கு தான் படம் எடுக்க முடியும். மற்றவர்கள் போல் மிகப் பிரம்மாண்டமாக எடுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

    லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன், மாளவிகா என ஏகப்பட்ட நடிகர்களை தாண்டி அனிருத் இசை, ரவி வர்மன் ஒளிப்பதிவு, நயன்தாரா 100 கோடி வரை செலவு செய்து எடுக்க அனுமதித்த நிலையில், படத்தை சொதப்பி விட்டார் விக்னேஷ் சிவன் என்றும் 20 கோடி செலவில் படங்களை எடுத்து 100 கோடி வசூல் ஈட்டி வந்த பிரதீப் ரங்கநாதனை 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து 50 கோடி நாயகனாக மாற்றிவிட்டாரே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் எப்போ வரும்னு தெரியல?.. அடுத்த படத்தை ஆரம்பித்த சந்தீப் கிஷன்!..

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் எப்போ வரும்னு தெரியல?.. அடுத்த படத்தை ஆரம்பித்த சந்தீப் கிஷன்!..

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சந்தீப் கிஷன் அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க சென்று விட்டார். சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

    கதைக்கு முக்கியத்துவம் தரும்… தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

    தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பவர் பேட்டா’ எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட… யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கௌரவம் – அரசியல்- ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

    இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான… பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து ‘பவர் பேட்டா’ ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க … ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.

    கவர்ச்சிகரமான தலைப்பு – ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் ‘பவர் பேட்டா’ திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்… அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.

    இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

  • விஜய்யே எப்படி சார் லீக் பண்ணுவார்.. கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாம்.. பொங்கிய விக்னேஷ் சிவன்!..

    விஜய்யே எப்படி சார் லீக் பண்ணுவார்.. கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாம்.. பொங்கிய விக்னேஷ் சிவன்!..

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான LIK திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது அவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் லீக் விவகாரம் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் இதுவரை 100 கோடி வசூலைத் தாண்டிய நிலையில், “எல்.ஐ.கே” திரைப்படம் வெளியான ஆறு நாட்களாகியும் சுமார் 44 கோடி வசூல் மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

    இப்படத்தை ப்ரோமோட் செய்வதற்காக விக்னேஷ் சிவன் தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்போது, “ஜனநாயகன்” திரைப்படத்தின் லீக் சர்ச்சை குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது: சினிமாவை நான் ஒரு கடவுளாகவே பார்க்கிறேன். என் படத்தின் எடிட்டர் கூட ஏதாவது காட்சிகளை அனுப்ப வேண்டுமானால், பாதுகாப்புடன் (பாஸ்வர்ட் வைத்து) தான் அனுப்புவார். அதனால், எடிட்டர்கள் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படி ஒரு செயலில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இதில் யாரோ திட்டமிட்டு செய்கிறார்கள் போல தெரிகிறது என்றார். மேலும், சிலர் விஜய் தான் லீக் செய்தார் என்று அரசியல் பண்றது எல்லாம் சுத்தமாக சரியில்லை என்றும் கூறியுள்ளார்.

    மேலும், இந்த லீக் விவகாரம் எந்த விதத்திலும் அந்தப் படம், தயாரிப்பாளர் அல்லது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் இதை புரிந்து கொண்டு, படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு சென்று பார்த்து ஆதரிப்பதே நடிகர் விஜய்க்கு நாம் செலுத்தும் மரியாதை எனவும் கூறினார்.

    இறுதியாக, “ஒரு ஹீரோவாக விஜய் அவர்களை நாம் திரையில் கடைசியாக பார்க்கும் தருணமாக ‘ஜனநாயகன்’ இருக்கலாம். அதற்குள் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தாண்டி ரசிகர்கள் திரையரங்கில் சென்று படம் பார்த்து கொண்டாட வேண்டும்” என்று விக்னேஷ் சிவன் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

  • மொட்டை மாடி பார்ட்டியில் போன் போட்டு சந்தானத்தை கலாய்த்த விஜே சித்து.. ஆர்யாவோட அட்டகாசம்!..

    மொட்டை மாடி பார்ட்டியில் போன் போட்டு சந்தானத்தை கலாய்த்த விஜே சித்து.. ஆர்யாவோட அட்டகாசம்!..

    நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில், வரும் 17ம் தேதி வெளியாக உள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் மறைந்த அணு ஆயுதம் மற்றும் அதைத் தேடும் ரகசிய ஏஜென்ட்களை மையமாகக் கொண்டு, அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் OTT உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வி.ஜே. சித்து நடத்தும் “மொட்டமாடி பார்ட்டி” நிகழ்ச்சியில் ஆர்யா மற்றும் கௌதம் ராம் கார்த்திக் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆர்யாவிடம் சந்தானம் அவர்களுக்கு கால் செய்து ப்ராங்க் செய்யச் சொல்லப்படுகின்றது.

    அப்போது, “சார்பட்டா பரம்பரை – பார்ட் 2” படத்தில் ரஞ்சித், சந்தானத்தையும் நடிக்க அழைக்கிறார் என்று கூறி, ஜான் சீனா மற்றும் ஜாக்கி சான் போன்றவர்களுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சித்து நகைச்சுவையாக பேசுகிறார். இந்த உரையாடல் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர், சித்து, “நீங்கள் பிஸியாக இருக்கும் நேரத்தில் தொந்தரவு செய்துவிட்டோம்” என்று கூறியபோது, சந்தானம் “ஆர்யாவுக்காக நான் எதுவாக இருந்தாலும் செய்வேன்” என்று கூறினார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தொடங்கிய ஆர்யா – சந்தானம் நட்பு இன்று வரை தொடர்வதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    மொத்தத்தில், “மிஸ்டர் எக்ஸ்” திரைப்படம் வேகமான, சஸ்பென்ஸ் நிறைந்த ஸ்பை ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    எப்போ பணம் வேணாலும் தயங்காம கேளுங்க…வெண்ணிற ஆடை மூர்த்தியை நெகிழ வைத்த அர்ஜூன்

  • LIC டைட்டிலுக்கு 112 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினாங்க.. விக்னேஷ் சிவன் சொன்ன ஷாக்கிங் தகவல்!..

    LIC டைட்டிலுக்கு 112 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினாங்க.. விக்னேஷ் சிவன் சொன்ன ஷாக்கிங் தகவல்!..

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான LIK படத்தின் தலைப்பு தொடர்பான ஷாக்கிங் பின்னணியை அவர் சமீபத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.

    மேலும், பிரதீப் ரங்கநாதன் நடித்த முந்தைய படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், இந்த படத்திற்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், சுமார் 44 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த படம் 100 கோடி கிளப்பை எட்டுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு குறித்த ஒரு ஷாங்கிங்கான தகவலை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு “LIC” என்று பெயரிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், Life Insurance Corporation of India (LIC) நிறுவனம் அந்த பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.112 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

    இந்த பிரச்சனை ஏற்படலாம் என முன்கூட்டியே கணித்திருந்ததால், “LIK”, “LIP”, “LID”, “LIF” போன்ற பல மாற்று தலைப்புகளை முன்பே தயார் செய்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இறுதியில், அவற்றில் “LIK” (Love Insurance Kompany) என்ற தலைப்பை தேர்வு செய்ததாகவும் கூறினார்.

    இந்த தலைப்பு மாற்றத்தின் பின்னணி தற்போது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  • சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

    சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

    தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர்.

    வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஹிப்-ஹாப் இசையின் பல்வேறு முகங்களை ஒரே மேடையில் கொண்டு வந்த இந்த விழா, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டிய இசை ஒன்றிணைப்பாக அமைந்தது. ரசிகர்களின் பெரும் திரளான வருகையுடன், இந்த நிகழ்ச்சி ஒரு உற்சாகமான, சமூகத்தை இணைக்கும் அனுபவமாக மாறியது.

    Alt+ மற்றும் The High Culture இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய இன்டிபெண்டென்ட் ஹிப்-ஹாப் இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கியமான கட்டமாக அமைந்தது.

    மேலும், கலைஞர் வேடன் தனது மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்திய “வணக்கம் வணக்கம்” என்ற வரியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டூர் ஐபி, தற்போது இளைஞர்களிடம் வலுவான கலாச்சார அடையாளமாக உருவெடுத்து வருகிறது.

    பெங்களூரில் கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து, இந்த டூரின் அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், பின்னர் உலகளாவிய அளவில் பல நாடுகளுக்கும் இந்த டூர் விரிவடைய உள்ளது.

  • அபிராமி வெங்கடாச்சலத்தின் லவ்வர் இவர் தானாம்.. இனிமே சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வரமாட்டார் போல!

    அபிராமி வெங்கடாச்சலத்தின் லவ்வர் இவர் தானாம்.. இனிமே சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வரமாட்டார் போல!

    நடிகை அபிராமி வெங்கடாச்சலம், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் மக்களிடையே பிரபலமானவர். தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில், சப்ஸ்க்ரிப்ஷன் சர்ச்சையில் சிக்கிய அபிராமி, தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    ஆரம்ப காலத்தில் மாடலிங்கில் தனது வாழ்க்கையை தொடங்கிய அபிராமி, மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். அதன் பிறகு Star Wars என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர், விஜய் தேவரகொண்டாவின் NOTA படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர், களவு மற்றும் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி, தனது தைரியமான மற்றும் வெளிப்படையான பேச்சுத் திறனால் மக்களிடையே அதிக கவனம் பெற்றார். இருப்பினும், அதே நிகழ்ச்சியில் முகேன் ராவ் உடன் ஏற்பட்ட காதல் தொடர்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

    அதனைத் தொடர்ந்து, இரு துருவம் என்ற தொடரில் நடித்த அவர், ஆரி அர்ஜுனன் உடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு ஸ்கெட்ச் ஓவியத்தை பகிர்ந்துள்ளார். அதில், காதலர்கள் ஒருவரை ஒருவர் நேசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    மேலும், அந்த பதிவில், “உன் கண்கள் என்னை பார்த்தாலே வார்த்தைகள் தேவையில்லை… ஆயிரம் காதல் கடிதங்கள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது போல உணர்கிறேன்” என்ற உணர்ச்சிப்பூர்வமான வரிகளையும் பகிர்ந்துள்ளார்.

    இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை மீண்டும் அபிராமி மீது திருப்பியுள்ளது. அபிராமியின் காதலர் யார், ஒருவழியாக வாழ்க்கைத் துணையை தேடிப் பிடித்து விட்டாரே என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

  • தமிழ் புத்தாண்டுக்காவது வசூல் வேட்டை நடத்தியதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி?.. LIK 5 நாள் வசூல் இதோ!..

    தமிழ் புத்தாண்டுக்காவது வசூல் வேட்டை நடத்தியதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி?.. LIK 5 நாள் வசூல் இதோ!..

    நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஐந்தாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பார்க்கலாம். முதல் நாளை விட தமிழ் புத்தாண்டு தினமான நேற்று அதிக வசூல் அள்ளியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நயன்தாரா தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    இந்த படம் அறிவியல், காதல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை இணைத்து, தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையான காதலை அளவிட முடியுமா என்ற கேள்வியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இந்த புதிய கதைக்களத்தை சுவாரஸ்யமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

    முன்னதாக லவ் டுடே, டிராகன், டியுட் போன்ற வெற்றி படத்தின் மூலம் 100 கோடி வசூலை கடந்த பிரதீப் ரங்கநாதன், இந்த படத்திலும் அதே சாதனையை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படம் எடுத்தால் 100 கோடி வசூல் எளிதாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    ஆனால், தற்போது இந்த படம் வெளியான 5 நாட்களில் சுமார் 44 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ஆரம்ப வரவேற்பு இருந்தாலும், 100 கோடி கிளப்பை எட்டுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் நாட்களில் படம் எப்படி செயல்படுகிறது என்பதே இதை தீர்மானிக்கும்.

    விக்னேஷ் சிவனை பொறுத்தவரையில் படம் வெளியானதே தனக்கு மிகப்பெரிய வெற்றி எனக் கூறியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யவில்லை என்றால் தோல்விப் படமாகவே மாறும் என்கின்றனர்.

  • தனுஷுக்கு மமிதா பைஜு படத்தாலே தொல்லையா?.. ‘கர’ தேதியில் கர்ச்சிப் போடும் ஜன நாயகன்!..

    தனுஷுக்கு மமிதா பைஜு படத்தாலே தொல்லையா?.. ‘கர’ தேதியில் கர்ச்சிப் போடும் ஜன நாயகன்!..

    விஜய்யின் ஜன நாயகன் படத்தை எப்படியாவது இந்த மாதத்துக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்கிற முனைப்பில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே லீக் ஆன படத்தை பெரிய தொகை எல்லாம் கொடுத்து வாங்க முடியாது என்றும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவது பாதியாக குறைந்துவிடும் என விநியோகஸ்தர்கள் எல்லாம் கம்பி நீட்டி வருகின்றனர்.

    கேபிள் டிவியிலேயே படத்தை போட்ட நிலையில், டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமத்துக்கும் சிக்கல் வந்துள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தை இந்த வாரமே வெளியிட படக்குழு முயற்சித்தாலும், தேர்தல் முடியும் வரை வெளியிட விஜய்க்கு எதிரானவர்கள் விடமாட்டார்கள் என்றே கூறுகின்றனர்.

    இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அது தனுஷின் ‘கர’ படத்துக்கு கஷ்டத்தை உண்டாக்கும் என்கின்றனர்.

    ஏற்கனவே இட்லி கடை படத்தை காந்தாரா 2 உடன் வெளியிட்டு தர்ம அடி வாங்கிவிட்டார் தனுஷ் என்கின்றனர். என்ன தான் ஜன நாயகன் வசூல் குறைந்தாலும் முதல் நாள் விஜய் படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நல்ல ஓபனிங் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

    ஜன நாயகன் மற்றும் கர என 2 படங்களிலும் மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ஒரே நாளில் வெளியானால் சிக்கல் தான் என்று தெரிகிறது. ஏப்ரல் 30ம் தேதி ஜன நாயகன் வெளியானால் தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மே 14ம் தேதி சூர்யாவின் கருப்பு படம் வெளியாக உள்ள நிலையில், 2 வார கேப் கட்டாயம் தேவைப்படும்.